கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடல் - சுவற்றில் 'ராம்' என எழுதி வைப்பு...!


கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடல் - சுவற்றில் ராம் என எழுதி வைப்பு...!
x

கிறிஸ்தவ மத வழிபாட்டுதலம் சூறையாடப்பட்டு சுவற்றில் ‘ராம்’ என்று எழுதி வைக்கபட்டுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் நர்மதபுரம் மாவட்டம் சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலமான சர்ச் உள்ளது. பழங்குடியினர் பெரும்பான்மையாக கொண்ட இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுதலத்தில் பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த கிறிஸ்தவ மதவழிபாட்டு தலம் இன்று மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை சூறையாடிய அந்த கும்பல் அங்குள்ள சுவற்றில் 'ராம்' என்று எழுதி வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவற்றில் 'ராம்' என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story