குடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலை- அகிலேஷ் யாதவ் விமர்சனம்


குடியுரிமை திருத்த சட்டம் பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலை- அகிலேஷ் யாதவ் விமர்சனம்
x
தினத்தந்தி 11 March 2024 6:05 PM GMT (Updated: 12 March 2024 12:31 AM GMT)

பா.ஜ.க.வின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

"10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர் என்பதையும் பா.ஜ.க. அரசு விளக்க வேண்டும். நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ன நடக்க போகிறது?

பாஜகவின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story