சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை


சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
x

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது. இதில் தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வெங்கட்நாராயண பாட்டி ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story