நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு


நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை நடக்கிறது. அதில் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிறப்பு கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்குமாறு மக்களவை, மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு 3 வரிகள் கொண்ட கொறடா உத்தரவு தனித்தனியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறப்பு கூட்டத்தொடரில் மிக முக்கியமான பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை, சபை தொடங்கும் காலை 11 மணி முதல் சபை ஒத்திவைக்கப்படும்வரை தொடர்ந்து சபையிலேயே இருக்க வேண்டும்.

கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதை மிக முக்கியமாக கருத வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story