டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது


டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது
x
தினத்தந்தி 15 Jun 2022 6:48 AM GMT (Updated: 15 Jun 2022 7:09 AM GMT)

டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை ஆஜராக அமலக்கத்துறை அழைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 3-வது நாளாக நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

3-வது நாளாக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் எம்பி.க்கள் , நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்தது காவல்துறை எதிர்ப்பு போராட்டம் நடத்த முயன்ற தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி காவல்துறை போராட்டத்தை தடுத்தனர். டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.


Next Story