காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு அல்ல கமல்நாத் கூறுகிறார்


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு அல்ல கமல்நாத் கூறுகிறார்
x

மராட்டிய அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மும்பை,

மராட்டிய அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் மும்பை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணியில் உள்ள சிவசேனா அதன் அணியை கவனித்து வருகிறது. அவர்கள் எப்படி தங்கள் எம்.எல்.ஏ.க்களை கையாள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படியே இருப்போம் என நான் உறுதியாக நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் விற்பனைக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story