இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒரே நாளில் 797 பேருக்கு பாதிப்பு உறுதி


இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒரே நாளில் 797 பேருக்கு பாதிப்பு உறுதி
x

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 26-ந்தேதி வரையிலான நிலவரப்படி, ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த மே 19-ந்தேதி 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேர், மராட்டிய மாநிலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.


Next Story