குடும்ப தகராறில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x

ராமநகரில் குடும்ப தகராறில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ராமநகர்:

ராமநகர் டவுன் பாலகேரி பேரங்கடி பகுதியை சேர்ந்தவர் கிரண் (வயது 29). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். கிரணின் மனைவி காயத்ரி (28). இந்த தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது. குழந்தை இறந்த பின்னர் கிரண், காயத்ரி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் 2 பேரும் மனம் உடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிரணும், காயத்ரியும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் ராமநகர் டவுன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story