"மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது!" இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2023 12:59 AM GMT (Updated: 18 Nov 2023 1:55 AM GMT)

மிதிலி புயல் திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

புதுடெல்லி,

மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றது. மேலும் இந்த புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் மோங்கா, கொபுரா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் கரையை கடக்கத்தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்கதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசியதுடன், கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. கரையைக் கடந்த மிதிலி புயல், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.


Next Story