ராணி எலிசபெத் மறைவு: டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது


ராணி எலிசபெத் மறைவு: டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
x

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

புதுடெல்லி,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.


பிலிப் - எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


Next Story