முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு..!


முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு..!
x

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

புனே,

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். புனேவில் உள்ள பிரதிபா பாட்டீல் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவரது அவரது கணவர் டாக்டர்.தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதிபா பாட்டீல் 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர். இவரது கணவர் தேவிசிங் மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி காலமானார்.


Next Story