டெல்லி: ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீர் தீ விபத்து


டெல்லி: ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீர் தீ விபத்து
x

தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள படேல் நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மூன்று ரெயில் பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




Next Story