டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஐக்கு டெல்லி போலீஸ் கடிதம்


டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஐக்கு டெல்லி போலீஸ் கடிதம்
x

டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஐக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இதன் பின்னணியில் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்கள் முழுவதும் வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனை சா்வா் முடக்கப்பட்டது தொடா்பாக சிபிஐக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய சர்வர்கள் சீனா மற்றும் ஹாங் காங்கை மையமாக வைத்து சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த நாடுகளில் இருந்து வந்துள்ள இ-மெயிலின் இணைய சர்வர் குறித்து சர்வதேச காவல் துறையிடம் சிபிஐ விவரங்களை பெற்றுத் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story