என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்


என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்
x

தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தாவை மத்திய அரசு நியமித்து உள்ளது.



புதுடெல்லி,



தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தா இன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பஞ்சாப் பிரிவில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் குப்தா. அவரை என்.ஐ.ஏ.வின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி வருகிற 2024ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி ஓய்வு பெறும் வரை அவர் அந்த பதவியில் நீடித்திடுவார்.

இதேபோன்று மற்றொரு உத்தரவில், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக (உள்துறை பாதுகாப்பு) ஸ்வாகர் தாஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் சத்தீஷ்காரில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் ஆவார். வருகிற 2024ம் ஆண்டு நவம்பர் 30ந்தேதி வரை பதவி வகித்திடுவார் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story