கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால்  விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:45 PM GMT)

கல்கட்டகியில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா நெல்லிஹாலி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா கருலகட்டி (வயது55). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். சிவப்பாவுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், அவர் விவசாயம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவப்பா டிராக்டர் வாங்கினார். அதற்காக அவர் வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூ.32 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடன் கொடுத்தவர்கள் சிவப்பாவிடம் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்தனர். ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் அவரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை.

இதனால் சிவப்பா மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கல்கட்டகி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கல்கட்டகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story