ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு ரெயில் ராஜமுந்திரி அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. சரக்கு ரெயில் விபத்தை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 9 ரெயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்ற பின் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





