ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு


ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு
x

கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளது.

கத்ரா (ஜம்மு மற்றும் காஷ்மீர்),

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கத்ராவை இன்று இரவு 10.07 மணியளவில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று தாக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதன் நீளம்: 75.79, ஆழம்: 5 கிமீ, இருப்பிடம்: ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ராவின் 80 கிமீ கிழக்கு என்று தேசிய நில அதிர்வு மையம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிரிசேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story