மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு


மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு
x

மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கானாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலையில் மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் நான்கு பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் இரண்டு பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்றும் அவர்கள் வயல்களில் வேலை செய்யும் போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அலிபூரில் நேற்று மாலை 04.45 மணியளவில் பலத்த காற்று வீசியது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 79 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இது சூறாவளி அல்ல என்று பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story