எலெக்ட்ரீசியன் குத்திக்கொலை; நண்பர் கைது


எலெக்ட்ரீசியன் குத்திக்கொலை; நண்பர் கைது
x

பெங்களூருவில் எலெக்ட்ரீசியன் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆனேபாளையா பகுதியில் வசித்து வந்தவர் இர்பான் (வயது 28). இவர் எலெக்ட்ரீசியன். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் இர்பான் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இர்பானை வழிமறித்த மர்மநபர் ஒருவர் இர்பானிடம் தகராறு செய்ததுடன் அவரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய இர்பானை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இர்பான் நேற்று காலை இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அசோக்நகர் போலீசார் நடத்திய விசாரணையில் இர்பானை முன்விரோதம் காரணமாக அவரது நண்பர் காசீம் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story