அலை அலையாய் மக்கள் வருகை: அயோத்தி எல்லைகள் மூடப்பட்டன


அலை அலையாய் மக்கள் வருகை: அயோத்தி எல்லைகள் மூடப்பட்டன
x

நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாளான இன்று ராமரை தரிசனம் செய்ய போட்டி போட்டுக்கொண்டு மக்கள் அதிகாலை 3 மணிக்கே குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது..

இந்தநிலையில், ராமர் கோவிலில் ஏராளாமான பக்தர்கள் திரண்டதையடுத்து அயோத்தி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன. அயோத்திக்கு செல்லும் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன.

ராமர் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அயோத்தி தாமுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று உத்தரப் பிரதேச காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்திக்கு வரும் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படுகின்றன. மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களும் அயோத்திக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான பக்தர்கள் வருவதால், கோவில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நிதானத்தை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இன்று கோவிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நடைப்பயணமாக அயோத்திக்குச் செல்லும் பக்தர்களும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராபங்கி காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


Next Story