'ஒவ்வொரு வருடமும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்'- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி


ஒவ்வொரு வருடமும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
x

Image Credits : ANI News

இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த வகையில், ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்புகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், 'அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்' என்று தெரிவித்தார்.


Next Story