தேர்தல் முடிவு என்ன வரும் என்று அனைவருக்கும் தெரியும்...! - திரிபுரா முதல்-மந்திரி நம்பிக்கை


தேர்தல் முடிவு என்ன வரும் என்று அனைவருக்கும் தெரியும்...! - திரிபுரா முதல்-மந்திரி நம்பிக்கை
x

திரிபுராவில் வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அகர்தலா,

திரிபுராவில் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கான தேர்தல் 16-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், முதல்-மந்திரி மாணிக் சஹா தேர்தல் பிரசாரத்தின்போது இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சூழ்நிலையை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் தாமரை சின்ன பட்டனை அழுத்துவார்கள். தேர்தல் முடிவு என்ன வரப்போகிறது என்று அனைவருக்கும் தெரியும். மேற்குவங்காளத்தில் தொழிற்சாலைகள் இல்லை. முன்னொரு காலத்தில் மேற்குவங்காளத்தை கண்டு நாம் பெருமைபட்டோம். ஆனால், தற்போது அனைத்தும் முடிந்துவிட்டது' என்று கூறினார்.


Next Story