மீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம்


மீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம்
x

பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் ( முன்பு டுவிட்டர்), வாட்ஸ்அப் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இவற்றில், தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்த கூடிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை இன்றிரவு 8.30 மணியளவில் திடீரென பாதிக்கப்பட்டது..அவற்றின் செயலிகள் செயல்படவில்லை. இதனால்,இணையவசதிகள் கிடைக்காமல் பயனர்கள் அவதியடைந்தனர்.

இதற்கிடையில், எங்கள் சேவைகளை அணுகுவதில் மக்கள் சிக்கலை எதிர்கொள்வதை நாங்கள் அறிகிறோம் .நாங்கள் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கும் கூடுதலாக முடங்கிய பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story