5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை கைது


5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை கைது
x

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

பெலகாவி: பெலகாவி தாலுகா காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளாள். இந்த சிறுமியின் தாய் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாய் வேலைக்கு சென்றதும் சிறுமிக்கு அவளது தந்தை குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொல்ல கூடாது என்றும் சிறுமியை, அவளது தந்தை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன சிறுமி சம்பவம் குறித்து வெளியே கூறவில்லை.

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதனால் சிறுமியை அவளது தாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிறுமியை டாக்டர் பரிசோதனை செய்த போது சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியிடம் அவளது தாய் கேட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறினார். இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் தந்தையை காகதி போலீசார் கைது செய்தனர்.


Next Story