பாகிஸ்தானில் இருந்து தவறுதலாக காஷ்மீரில் ஊடுருவிய தந்தை-மகன் ஒப்படைப்பு


பாகிஸ்தானில் இருந்து தவறுதலாக காஷ்மீரில் ஊடுருவிய தந்தை-மகன் ஒப்படைப்பு
x

பாகிஸ்தானில் இருந்து தவறுதலாக காஷ்மீரில் ஊடுருவிய தந்தை-மகன் ஒப்படைக்கப்பட்டனர்.

காஷ்மீர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் போலாஸ் கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் அப்துல் ஹமிது. இவரது மகன் அப்பாஸ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காஷ்மீர் எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் வந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட குல்புர் செக்டாரில் நுைழந்த அவர்களை வீரர்கள் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் தந்தை-மகன் இருவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story