பீகாரில் பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து


பீகாரில் பயணிகள்  ரெயிலில் திடீர் தீ விபத்து
x

பீகாரில் பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பாட்னா,

பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்றபோது ரயில் இன்ஜின் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இன்ஜினில் பற்றிய தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டதால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story