மல்பேயில் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு


மல்பேயில்  கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:45 PM GMT)

மல்பேயில் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

உடுப்பி-

உடுப்பி மாவட்டம் மல்பே பகுதியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்தநிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இரவு நேரத்தில் துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படகில் தூங்குவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு மல்பே துறைமுகத்தில் படகில் நாகசாமி (வயது44) என்ற மீனவர் தூங்கி கொண்டிருந்தார்.

இவரது படகின் அருகே வரிசையாக படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்தநிலையில் சிறுநீர் கழிப்பதற்காக நாகசாமி எழுந்தார். அப்போது படகில் இருந்து மற்றொரு படகிற்கு அவர் தாவினார். இதில் நாகசாமி கடலுக்குள் தவறி விழுந்தார். இதனை அருகே படகில் இருந்த பாபுஜி, முருகேஷ் ஆகியோர் பார்த்தனர். அவர்கள் கயிறு கட்டி நாகசாமிைய மீட்க முயன்றனர். ஆனாால் அவர்களால் அவரை மீட்கமுடியவில்லை.

இதுகுறித்து அவர்கள் மல்பே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கடலுக்குள் விழுந்த நாகசாமியை பிணமாக அவர்கள் மீட்டனர். இதையடுத்து போலீசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மல்பே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் நாகசாமி மதுபோதையில் இருந்ததால் தவறி கடலுக்குள் விழுந்ததும், இதனால் அவரால் வெளியே வரமுடியவில்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story