ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர்


ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற ரா அமைப்பின் முன்னாள் தலைவர்
x

ராகுல் காந்தியின் யாத்திரையில் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பங்கேற்றார்.

லக்னோ,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்த 24-ம் தேதி டெல்லியை சென்றடைந்தது.

பின்னர், கடந்த 24-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றிய பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பாரத் ஜோடோ யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. டெல்லியில் தொடங்கிய யாத்திரை தற்போது உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 3 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் 'ரா'(RAW) உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் பங்கேற்று, ராகுல் காந்திக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.



Next Story