உத்தரபிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி - திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்


உத்தரபிரதேசத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி - திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்
x

உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின் போது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமணத்தின் போது சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது.


Next Story