பீகாரில் 53 பெட்டிகளுடன் தடம்புரண்ட சரக்கு ரெயில்...!


பீகாரில் 53 பெட்டிகளுடன் தடம்புரண்ட சரக்கு ரெயில்...!
x

பீகாரில் 53 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் தடம் புரண்டது.

பாட்னா,

பீகாரில் உள்ள குர்பா என்ற ரெயில் நிலையத்தில் நிலகரி ஏற்றப்பட்டிருந்த சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென சரக்கு ரெயில் தண்டவாளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரெயிலின் 53 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகியது.

மேலும் விபத்தில் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தண்டவாளத்தில் கொட்டியது. இதனால் அந்த வழியே செல்லக்கூடிய மற்றும் வரக்கூடிய ரெயில்கள் அனைத்து நிறுத்தப்பட்டது.

பெட்டிகள் சேதமடைந்த நிலையில், விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மதிய கிழக்கு ரெயில்வே கூறியுள்ளது. விபத்தை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விபத்து நடைபெற்ற பகுதிக்கு சென்று நிலைமை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story