வாலிபர் கொலையில் நண்பர் கைது; தன் காதலியை திருமணம் செய்ததால் கொன்றது அம்பலம்


வாலிபர் கொலையில் நண்பர் கைது;  தன் காதலியை திருமணம் செய்ததால் கொன்றது அம்பலம்
x

வாலிபர் கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார். தன் காதலியை திருமணம் செய்ததால் கொன்றது அம்பலமானது.

பெங்களூரு: பெங்களூரு காஜனநகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (வயது 23). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு பூக்கள் அலங்காரம் செய்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பழைய பையப்பனஹள்ளி பகுதியில் வைத்து சதீசை மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.


இந்த கொலை சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சதீசை கொலை செய்ததாக அவரது நண்பர் ராகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராகேஷ் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்து உள்ளார். ஆனால் அந்த இளம்பெண் சதீசை காதலித்து வந்து உள்ளார். இதுபற்றி அறிந்ததும் ராகேஷ், சதீசிடம் தகராறு செய்து வந்து உள்ளார். ஆனாலும் இளம்பெண்ணை சதீஷ் திருமணம் செய்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், சதீசை தீர்த்துக்கட்டியது தெரியவந்து உள்ளது. கைதான ராகேஷ் மீது பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story