மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை மேலும் நீட்டிப்பு.!


மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை மேலும் நீட்டிப்பு.!
x
தினத்தந்தி 6 July 2023 4:20 AM GMT (Updated: 6 July 2023 4:27 AM GMT)

கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மணிப்பூரில் ஜூலை 5 ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இணைய சேவை தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதை அடுத்து, கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story