காதலன் கண்முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள்


காதலன் கண்முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள்
x
தினத்தந்தி 17 July 2023 11:41 AM GMT (Updated: 17 July 2023 12:01 PM GMT)

ராஜஸ்தானின் ஜோத்பூரில் சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பட்டியலின சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

காவல்துறை உயர் அதிகாரி அம்ரிதா துஹான் இது குறித்துத் தெரிவித்ததாவது:

அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கடந்த சனிக்கிழமை காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். இருவரும் நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் ஜோத்பூர் வந்துள்ளனர். தங்குவதற்காக இடம் தேடி ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு அதன் பராமரிப்பாளர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். உடனே அங்கிருந்து இருவரும் வெளியேறியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த சமந்தர் சிங், தரம்பால் சிங் மற்றும் பட்டம் சிங் ஆகிய 3 பேர் அவர்களிடம் நட்பாக பழகி உணவு மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் அதிகாலை 4 மணியளவில் ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைக்கழகத்தின் ஹாக்கி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சென்றதும் சிறுமியின் காதலனை தாக்கிவிட்டு சிறுமியை மூவரும் பலாத்காரம் செய்துள்ளனர். காலை நடைபயிற்சிக்காக மக்கள் வருவதை கண்டு மூவரும் ஓடினர். நடைப்பயிற்சிக்காக வந்தவர்களிடம் காதலன் உதவி கேட்டு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

காவல்துறை மோப்ப நாய், கண்காணிப்பு கேமிரா மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளைத் தேடத்தொடங்கினர். சம்பவம் நடந்து சில மணி நேரத்திற்கு பின்பு ஜோத்பூரின் ரத்தநாடா அருகே கணேஷ்புராவில் உள்ள ஒரு வீட்டில் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றதால் கீழே விழுந்ததில் இருவருக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மற்றொருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

அவர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு பின் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சமந்தர் சிங் ஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர், தர்ம் பால் சிங் முதுகலை மாணவர் மற்றும் பட்டம் சிங் அஜ்மீரில் பிஎட் படிக்கிறார். என தெரிய வந்தது

பாலியல் பலாத்காரம் செய்த 3 நபர்கள் மற்றும் தவறாக நடக்க முயற்சித்த விடுதி பராமரிப்பாளர் ஆகியோரை 3 பிரிவின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தையடுத்து ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கின் நிலை மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியது.

இதற்குக் காங்கிரஸ் தலைவரும் சமூக நல வாரியத் தலைவருமான அர்ச்சனா சர்மா ஜெய்ப்பூரில் கூறுகையில், குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்தனர், இது மாநில அரசு பெண்கள் பாதுகாப்பில் காட்டும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

ஜோத்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தாதியால் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாஜக மற்றும் அவர்களின் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளதாக முதல்வர் கெலாட் தெரிவித்தார்.


Next Story