ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு


ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
x

ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்தார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு கவர்னரை போன்று மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், கர்நாடகா உள்பட பல மாநில கவர்னர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, நாட்டின் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மாநில கவர்னர்கள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story