குஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலி


குஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலி
x

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெள்ளிக்கிழமை 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஜாம்நகர்,

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெள்ளிக்கிழமை 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

சாதனா காலனி பகுதியில் 30 வருடம் பழைமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஜெய்பால் ஸ்வாதியா (35), மிட்டல் ஸ்வாதியா (35), சிவராஜ் (4) என அடையாளம் காணப்பட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அவர்கள் குருகோபிந்த்சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறியதால், தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story