பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி: நன்றி தெரிவித்த மத்திய மந்திரி எல்.முருகன்


பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி:  நன்றி தெரிவித்த மத்திய மந்திரி எல்.முருகன்
x

கோப்புப்படம்

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது 44வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், "அயராத முயற்சி, எல்லையற்ற ஆற்றல் மற்றும் உறுதியான உறுதியுடன் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப நீங்கள் தொடர்ந்து பாடுபடுகிறீர்கள். பிறந்தநாள் என்பது வாழ்க்கையின் பொருத்தத்தைப் பார்க்கவும், மதிப்பிடவும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். குடும்பம், சமூகம் மற்றும் தேசம் ஆகியவற்றிற்கான நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் நம்மை மீண்டும் அர்ப்பணிக்க இது நம்மை ஊக்குவிக்கிறது.

தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்காக நீங்கள் உழைக்கும் அர்ப்பணிப்பு குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்திற்கும், இனிவரும் காலங்களில் உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி. உங்களின் மதிப்புமிக்க வாழ்த்துக்களும் அன்பான வார்த்தைகளும் தேசத்துக்காக மேலும் உழைக்க எப்போதும் அதிக ஆற்றலைத் தருகின்றன. உங்கள் ஆற்றல்மிக்க தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நான் எப்போதும் என்னால் முடிந்ததை வழங்க முயற்சிப்பேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story