அவன் கொலை செய்வான், பல துண்டுகளாக வெட்டுவான்; 2020-ம் ஆண்டிலேயே புகார் அளித்த ஷ்ரத்தா வாக்கர்


அவன் கொலை செய்வான், பல துண்டுகளாக வெட்டுவான்; 2020-ம் ஆண்டிலேயே புகார் அளித்த ஷ்ரத்தா வாக்கர்
x

அவன் கொலை செய்ய முயற்சிப்பது பற்றி அவனது பெற்றோருக்கும் தெரியும் என்று 2020-ம் ஆண்டிலேயே ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் எனும் 28 வயது இளம்பெண் தனது காதலன் அப்தாப் அமீன் பூனாவல்லா என்பவரால் சமீபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ந்தேதி கைது செய்து காவலில் எடுத்து உள்ளது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே, அவன் கொலை செய்வான் என்றும் பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி மராட்டியத்தின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அதில், அவன் இன்று என்னை மூச்சு திணற செய்து கொல்ல முயன்றான்.

என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கி கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்ட கூடும் என தெரிவித்து உள்ளார்.

அந்த புகாரில், அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story