கடும் பனிமூட்டம்: டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்


கடும் பனிமூட்டம்: டெல்லி உள்ளிட்ட 5  மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
x

வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ,இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது .

புதுடெல்லி,

வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக , பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது .

மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி 10 முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Next Story