கேரளாவில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை...!


கேரளாவில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை...!
x

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் மத்திய கேரளாவில், வட கேரளாவிலும் கனமழை தொடரும் எனவும் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மேலும் கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, ஆலப்புழா, உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனையடுத்து இந்த பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.


Next Story