தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு; ரெயில்கள், விமானங்கள் தாமதம்


தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு; ரெயில்கள், விமானங்கள் தாமதம்
x
தினத்தந்தி 29 Dec 2023 3:47 PM GMT (Updated: 29 Dec 2023 3:50 PM GMT)

அடுத்த 2 நாட்களுக்கு டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.

கடும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை சரியாக தெரியாததால், விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் இருந்து கிளம்பும் பல்வேறு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story