குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு


குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து  உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு
x

குஜராத் முதல் மந்திரி உடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார் .

வதோதரா,

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

600 மரங்கள் வேருடன் சய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. காற்றில் அடித்து செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் பல வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில் பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். குஜராத் முதல் மந்திரி உடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார் .

மேலும் அமித்ஷா , மாண்ட்வி சிவில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்ட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story