தெலுங்கானாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து


தெலுங்கானாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து
x

தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரின் நல்லகுட்டா பகுதியில் பிரபலமான தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இருந்து நேற்று கரும்புகை வெளிவந்ததால் அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிரேன் உதவியுடன் 6 பேர் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மின்கசிவால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.


Next Story