சிறுமி சொகுசு காரில் வைத்து பாலியல் வன்கொடுமை - எம்.எல்.ஏ. மகன் உட்பட 5 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு


சிறுமி சொகுசு காரில் வைத்து பாலியல் வன்கொடுமை - எம்.எல்.ஏ. மகன் உட்பட 5 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு
x

17 வயது சிறுமி சுகுசு காரில் வைத்து பாலியல் வன்கொடுமை - எம்.எல்.ஏ. மகன் உட்பட 5 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு சிறுமி சொகுசு காரில் வைத்து பாலியல் வன்கொடுமை - எம்.எல்.ஏ. மகன் உட்பட 5 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவுமிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் 5 கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

கூடுதலாக கிடைத்துள்ள தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் ஒருவன் எம்எல்ஏ மகன் என்பதும் மற்றொருவன் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18 வயது இளைஞரை ஜூன் 3ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மற்ற நான்கு பேருக்கும் எதிரான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், 48 மணி நேரத்திற்குள் அவர்கள் காவலில் எடுக்கப்படுவார்கள் போலீசார் கூறி உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கிளப்பிற்கு வெளியில் இருந்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தேசிய மகளிர் ஆணையம் தெலுங்கானா போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது, இந்த வழக்கில் விரைவான விசாரணையை நடத்த வேண்டும் புகார்தாரருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பையும் வழங்கவேண்டு என ஆணையம் கோரி உள்ளது.


Next Story