இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் - பரூக் அப்துல்லா


இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் - பரூக் அப்துல்லா
x

இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன் என்று காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஸ்ரீநகர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம்இஸ்லாமாபாத் கோர்ட்டிற்கு ஆஜராக வந்தபோது, ராணுவத்தால் கோர்ட்டு வளாகத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார். இம்ரான் கானின் கைதை தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பல இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"பாகிஸ்தானில் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளது பாகிஸ்தானில் அரசியல் சிக்கலை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய வேண்டும் என்றே நாம் விரும்ப வேண்டும். இம்ரான் கானை கடவுள் காப்பாற்றுவாா் என நம்புகிறேன். பாகிஸ்தான் உருவானதில் இருந்து பல்வேறு மோசமான அரசியல்சூழல்களை எதிா்கொண்டுள்ளது.

நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான் என்பது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து. வலிமையான, ஜனநாயகமான பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டும். பாகிஸ்தானில் ஜனநாயகம் வளர்ந்தால் அது இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மோசமாக உள்ளது." என்றார்.


Next Story