துணை ஜனாதிபதி வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் போது தவறி விழுந்து உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழப்பு


துணை ஜனாதிபதி வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் போது தவறி விழுந்து உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழப்பு
x

அங்குள்ள அரங்கத்தின் மேடையில் இருந்து உளவுப்பிரிவு அதிகாரி தற்செயலாக விழுந்தார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் போது, புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 20 அன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தில், தெலுங்கானா காவல்துறையின் உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு குழு மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று பரிசீலனை செய்து கொண்டிருந்த போது, அங்குள்ள அரங்கத்தின் மேடையில் இருந்து புலனாய்வுப் பிரிவின் (ஐபி) உதவி இயக்குநர் குமார் அமிரேஷ் தற்செயலாக விழுந்தார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 51 வயதான ஐபி அதிகாரி குமார், அரங்கத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மேடையில் இருந்து தவறி விழுந்தார்.

அதில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறைந்த அதிகாரி குமார் அமிரேஷுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

1 More update

Next Story