மேற்கு வங்காளத்தில் வருமானவரி சோதனை: பல்வேறு நிறுவனங்களில் ரூ.11 கோடி பறிமுதல்


மேற்கு வங்காளத்தில் வருமானவரி சோதனை: பல்வேறு நிறுவனங்களில் ரூ.11 கோடி பறிமுதல்
x

மேற்கு வங்காளத்தில் பல்வேறு நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தினர்.

டெல்லி,

மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மேற்கு வங்காளத்தில் பல நிறுவனங்களில், கணக்கில் வராத பணப்பரிவர்த்தனை நடப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொல்கத்தா, முர்சிதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பீடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 24-க்கும் அதிகமான இடங்களில் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான ஜாகிர் உசைன் நிறுவனமும் அடங்கும்.

1 More update

Next Story