4 மாதங்களில் இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு 754 ஆக உயர்வு


4 மாதங்களில் இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு 754 ஆக உயர்வு
x

4 மாதங்களில் இல்லாத அளவாக கொரோனா பாதிப்பு 754 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. 2 நாள் சரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் 618 ஆக உயர்ந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 754 பேருக்கு தொற்று உறுதியானது.

கடந்த நவம்பர் 12-ந் தேதி 734 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு இந்த அளவை இப்போது எட்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 710 ஆக அதிகரித்தது.

24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 327 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 297 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

கொேரானாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 426 அதிகரித்தது. தற்போது, 4 ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 5 பேர் பலியான நிலையில், நேற்று கர்நாடகாவில் மட்டும் ஒருவர் உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 790 ஆக அதிகரித்தது.


Related Tags :
Next Story