இந்தியாவில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!!


இந்தியாவில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!!
x

கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஏறுமுகமாக இருந்த கொரோனா பரவல், நேற்று முன்தினம் சற்று குறைந்தது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 899 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. இதன்படி நேற்று 12 ஆயிரத்து 781 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 9,923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 923 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,19,396 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,27,15,193 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 79,313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,96,32,43,003 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,00,024 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,88,641 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 85,85,26,354 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.


Next Story