'காசிந்த்-2023' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவ வீரர்கள் கஜகஸ்தான் பயணம்


காசிந்த்-2023 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவ வீரர்கள் கஜகஸ்தான் பயணம்
x

Image Courtesy : @PIB_India 

7-வது கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியா-கஜகஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி, 2016-ம் ஆண்டு 'பிரபால் டோஸ்டைக்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 'காசிந்த்' பயிற்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விமானப்படைப் பிரிவையும் சேர்த்து இருவழிப் பயிற்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு 'காசிந்த்-2023' 7-வது கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த பயிற்சி கஜகஸ்தானில் வரும் 30-ந்தேதி(நாளை) தொடங்கி, நவம்பர் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு தரப்பினரும் பரந்த அளவிலான போர்த் திறன்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், படைப்பிரிவுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story