இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுகிறது


இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுகிறது
x

வானிலையை பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது

புதுடெல்லி,

கடந்த 2020-ம் ஆண்டு, விண்வெளித்துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டது. இந்த பின்னணியில், இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட், இம்மாதம் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கு 'விக்ரம்-எஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 'இஸ்ரோ' ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. வணிக நோக்கத்தில், ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளது.

'விக்ரம்-எஸ்' ராக்கெட்டில் வாடிக்கையாளர்களின் 3 சுமைகள் ஏற்றி அனுப்பப்படுகின்றன. வானிலையை பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறுகிறது.


Next Story